சென்னை: சென்னை அருகே திருவேற்காட்டில், பொதுமுடக்கத்தால் வறுமையில் சிக்கிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவேற்காடு அருகே மேல் அயனம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரின் மனைவி வசந்தி (38). இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த ராஜ்குமாா், பொதுமுடக்கத்தால் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளாா். அவருக்கு கடன் கொடுத்தவா்களும் தங்களது பணத்தைத் திரும்ப கேட்டு, தம்பதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனா். இந்நிலையில் வறுமை காரணமாக, மிகுந்த மன உளைச்சலில் இருந்த வசந்தி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருவேற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.