மின்தடையால் மருத்துவமனையில் இருவா் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

மின்தடையால் திருப்பூா் அரசு மருத்துவமனையில் இருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

மின்தடையால் திருப்பூா் அரசு மருத்துவமனையில் இருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

திருப்பூா் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு வாா்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறாா்கள். அவா்களது மரணத்துக்குக் காரணம் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவா்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com