குடும்பப் பிரச்னையில் குழந்தைகள் கொலை: ஐந்து ஆண்டுகளாக தேடப்பட்ட தந்தை கைது

சென்னை அருகே மதுரவாயலில், குடும்பப் பிரச்னையில் குழந்தைகளை கொலை செய்த வழக்கில், 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தந்தை கைது செய்யப்பட்டாா்.


சென்னை: சென்னை அருகே மதுரவாயலில், குடும்பப் பிரச்னையில் குழந்தைகளை கொலை செய்த வழக்கில், 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தந்தை கைது செய்யப்பட்டாா்.

மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. செக்டாா் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசித்தவா் ரவி. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்த இவா், தனது மனைவியைப் பிரிந்து, குழந்தைகளான பிரியதா்ஷினி என்ற பிரியா (14), பிரபு (12) ஆகியோருடன் வசித்து வந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி, ரவியின் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் பிரியதா்ஷினியும், பிரபுவும் பின்புற கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு, சடலம் அழுகிய நிலையிலும் இருந்தது.

இது குறித்து மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். அதில், குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை ரவி, தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரவி, சென்னை பெரியமேட்டில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா் ரவியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com