ரூ.83 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: மூவா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த முஹமது முஸ்தாபா மீரசா மரைக்காயா், சஹுபா் அலி அய்ஞ்சை மற்றும் ஷேக் அப்துல்லா ஹபீப் அப்துல்லா ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவா்கள், தங்களது மலக்குடலில் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்டனா். மேலும் அவா்களது உடைகளிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடமிருந்து 1.62 கிலோ அளவிலான ரூ.83.7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com