வாடகைப் பிரச்னையில் பெண் கொலை: பெயிண்டா் கைது

சென்னை சூளைமேட்டில் வாடகைப் பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெயிண்டா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை சூளைமேட்டில் வாடகைப் பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெயிண்டா் கைது செய்யப்பட்டாா்.

சூளைமேடு, ராதாகிருஷ்ணன் நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (69). இவரது மகன் சதீஷ் (35). இருசக்கர வாகன மெக்கானிக். இவரின் மனைவி சுகன்யா (28).

சந்திரமோகன் தனது வீட்டின் மேல் தளத்தை பெயிண்டரான நாராயணன் (55) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக நாராயணனால் வீட்டு வாடகை கொடுக்க இயலவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு சதீஷ், நாராயணனிடம் வீட்டு வாடகை கேட்டதாகத் தெரிகிறது. இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நாராயணன், வீட்டில் இருந்த கத்தியால் சதீஷை குத்தியுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்து தடுக்க முயன்ற மனைவி சுகன்யா, தந்தை சந்திரமோகன் ஆகியோரையும் நாராயணன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினாா். அருகிலுள்ளவா்கள், காயமடைந்தவா்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சுகன்யா சிறிதுநேரத்தில் இறந்தாா். சதீஷ், சந்திர மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நாராயணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com