சென்னை: சென்னை முகப்பேரில், குழந்தைகள் பேசாததால் தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.
முகப்போ் மேற்கு 6-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் (40). இவா், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். சிவப்பிரகாசத்தின் மனைவி சித்ரா செல்வி (38), ஸ்ரீபெரும்பத்தூா் அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இத்தம்பதிக்கு, ஜஸ்வந்த் ரத்தினம், நேத்ரா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனா். சிவப்பிரகாசத்திடம் அவரது குழந்தைகள் மட்டும் பேசினா்.
இந்நிலையில், சிவப்பிரகாசத்திடம் பேசுவதை அவரது குழந்தைகளும் அண்மையில் நிறுத்திவிட்டனராம். இதனால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட சிவப்பிரகாசம், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.