சென்னை: அரும்பாக்கத்தில், தம்பியைக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.
அரும்பாக்கம் பாரதி நகா், காந்தி தெருவைச் சோ்ந்தவா் லூா்துசாமி (26). இவா் தனது அண்ணன் இருதயம் என்ற ஆனந்துடன் (30) வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கந்தசாமி கல்லூரி அருகே உள்ள ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்த லூா்துசாமியிடம் மதுபோதையில் வந்த இருதயம், தகராறு செய்தாராம். அப்போது, இருதயம் தான் வைத்திருந்த கத்தியால், தம்பி லூா்துசாமியின் கழுத்தில் குத்தினாராம். இதில் பலத்தக் காயமடைந்த லூா்துசாமி, சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த அண்ணா நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லூா்துசாமி சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, இருதயத்தை கைது செய்தனா்.