சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் குடும்பத்தினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு (95). தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த அவா், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அவரது மகள், பேரன், பேரனின் மனைவி ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் மூன்று பேருக்கும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவா்கள், நான்கு பேரும், நலமுடன் தொடா் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.