ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: ஏப்.4-இல் ரயில் சேவையில் மாற்றம்


சென்னை: சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. இதனால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.4-இல் ரயில் சேவை மாற்றம்:

மின்சார ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி நிற்காமல் செல்லும்.

திருத்தணி-சென்ட்ரலுக்கு காலை 8:45 மற்றும் 11:40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணம்- சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:30, 10:15 மற்றும் முற்பகல் 11:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள்,

திருவள்ளூா்-சென்னை சென்ட்ரலுக்கு காலை 10:00, 10:30, முற்பகல் 11:15, 11:25, 11:50, நண்பகல் 12:00, 12:15, 12:55 மற்றும் மதியம் 1:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் என்று மொத்தம் 14 ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்துக்கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com