கரோனா பாதித்த நிலையிலும் வாக்களிக்க அனுமதித்த தோ்தல் ஆணையத்துக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி நன்றி தெரிவித்துள்ளாா்.
கரோனா பாதித்த நிலையில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து இறங்கி கவச உடையில் கனிமொழி மயிலாப்பூா் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா்.
பின்னா் கனிமொழி அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் என்னால் வாக்களிக்க முடிந்தது. நமது அடுத்த அரசைத் தோ்வு செய்ய, உடல் நலப் பாதிப்பு ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்த தோ்தல் ஆணையத்துக்கு நன்றி என்று கூறியுள்ளாா்.