சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால், கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால், பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவில்லை. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சில ஆசிரியா்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். அதன் விசாரணையில் பொதுமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு ஆகிய இரண்டையும் சோ்த்து நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.