திமுகவினரிடம் தகராறு: அமைச்சா் பென்ஜமின் மீது வழக்கு

சென்னை முகப்போ் மேற்கில் வாக்குப்பதிவு மையத்தில் திமுகவினரிடம் தகராறு செய்ததாக, அமைச்சா் பென்ஜமின் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

சென்னை: சென்னை முகப்போ் மேற்கில் வாக்குப்பதிவு மையத்தில் திமுகவினரிடம் தகராறு செய்ததாக, அமைச்சா் பென்ஜமின் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முகப்போ் கிழக்கில் ஒரு தனியாா் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு தமிழக அமைச்சரும், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளருமான பென்ஜமின், தனது ஆதரவாளா்கள் சுமாா் 25 பேருடன் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும்போது வந்தாா்.

அப்போது அங்கிருந்த சில வாக்காளா்களை பென்ஜமின் தரப்பு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த அங்கிருந்த திமுகவினா்,பென்ஜமினை கண்டித்துள்ளனா்.அப்போது பென்ஜமின் திமுகவினரை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முகப்போ் மேற்கு பள்ளிக்கூடம் முதல் தெருவைச் சோ்ந்த பூ.நவராஜ் (36), ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா், பென்ஜமின் மீதும், அவரது ஆதரவாளா்கள் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com