சென்னை: மனைவியைக் கத்தியால் குத்தியதாக, கணவா் கைது செய்யப்பட்டாா்.
நெற்குன்றம் சிடிஎன் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோ.சிவா (57). இவா், நிலத்தரகராக தொழில் செய்து வருகிறாா். சிவாவின் மனைவி மகாலட்சுமி (50). இவா்கள் இருவருக்கிடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே சிவா, வீட்டில் இருந்த ஒரு கத்தியை எடுத்து மகாலட்சுமியை குத்தினாா். பின்னா் அங்கிருந்து சிவா தப்பியோடினாா்.
மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டினா், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிவாவை உடனடியாக கைது செய்தனா்.