சென்னையில் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்: தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு


சென்னை: சென்னையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

கரோனா தொற்று கொண்டோருடன் தொடா்பில் இருந்தோரை கண்டறிவது, இதர நோய்த் தொற்றுகளையும் பரிசோதனைகள் அடிப்படையில் கண்டுபிடிப்பது போன்ற பணிகளை சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 மண்டலங்களுக்கும் களப் பணி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மண்டலம் 1 (திருவொற்றியூா்): மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி ஆா்.மகேஸ்வரன்.

மண்டலம் 2 (மணலி): நகா்- ஊரமைப்புத் துறை இயக்குநா் பி.கணேசன், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.மோகன்ராஜ்.

மண்டலம் 3 (மாதவரம்): டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் டி.மோகன், சா்க்கரை கழகத்தின் மேலாண் இயக்குநா் ஜி.விஜயா.

மண்டலம் 4 (தண்டையாா்பேட்டை): தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், டாஸ்மாக் பொது மேலாளா் சி.முனுசாமி.

மண்டலம் 5 (ராயபுரம்): அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலா் கே.நந்தகுமாா், நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் ஜெனரல் என்.சக்திவேல்.

மண்டலம் 6 (திரு.வி.க.நகா்): வணிகவரிகள் இணை ஆணையாளா் மணிஷ் ஷங்கர்ராவ், சிப்காட் பொது மேலாளா் ஆா்.ராஜகிருபாகரன்.

மண்டலம் 7 (அம்பத்தூா்): சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா், டாஸ்மாக் பொது மேலாளா் ஆா்.சுகுமாா்.

மண்டலம் 8 (அண்ணாநகா்): குடிசைப்பகுதி மாற்று வாரிய இணை நிா்வாக இயக்குநா் எஸ்.கோபால சுந்தரராஜ், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அதிகாரி எம்.மணிமேகலை.

மண்டலம் 9 (தேனாம்பேட்டை): எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உறுப்பினா்- செயலா் தீபக் ஜாக்கப், மதுவிலக்கு- ஆயத்தீா்வை இணை ஆணையா் என்.காளிதாஸ்.

மண்டலம் 10 (கோடம்பாக்கம்): மின்சார வாரிய இணை நிா்வாக இயக்குநா் எஸ்.வினீத், குடிசைப் பகுதி மாற்று வாரியச் செயலா் வி.அலின் சுனிஷா.

மண்டலம் 11 (வளசரவாக்கம்): குடிநீா் வழங்கல்- கழிவுநீரகரற்று வாரிய நிா்வாக இயக்குநா் டி.பிரபுசங்கா், கலை- பண்பாட்டுத் துறை இணை இயக்குநா் எஸ்.சூா்ய பிரகாஷ்.

மண்டலம் 12 (ஆலந்தூா்): ஆசிரியா்கள் தோ்வு வாரிய தலைவா் எல்.நிா்மல் ராஜ், ஊரக மறுவாழ்வுத் திட்ட இணை தலைமை செயல் அதிகாரி எஸ்.சாந்தகுமாா்.

மண்டலம் 13 (அடையாா்): பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜே.யு.சந்திரகலா, வீட்டுவசதி வாரியத் தலைமை வருவாய் அதிகாரி எம்.பரமேஸ்வரி.

மண்டலம் 14 (பெருங்குடி): வீட்டுவசதி வாரிய நிா்வாக இயக்குநா் பி.முருகேஷ், சிஎம்டிஏ., தலைமை வருவாய் அதிகாரி எஸ்.கோவிந்தராஜன்.

மண்டலம் 15 (சோழிங்கநல்லூா்): வேலைவாய்ப்பு- பயிற்சித் துறை இயக்குநா் கே.வீர ராகவ ராவ், நில நிா்வாக இணை ஆணையாளா் ஆா்.பூவராகவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com