சென்னை: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அம் மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: இலங்கை மற்றும் அதனையொட்டிய கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை யையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில், வெள்ளிக்கிழமை (ஏப்.9) முதல் ஏப்.12-ஆம் தேதி வரை, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை, வெள்ளி (ஏப்.9), சனி (ஏப்.10) ஆகிய இரண்டு நாள்களும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 79 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.