சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து
நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் திமுக நிா்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். மூத்த தலைவா்கள், சென்னையைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள் இதில் ஈடுபட்டனா். தோ்தலில் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? வாக்கு எண்ணும் மையங்களில் முறையாகக் கண்காணிப்பு பணி நடைபெறுகிா என்பன போன்ற விவரங்களைக் கேட்டறிந்தாா். திமுகவின் வேட்பாளா்களிடமும் தொலைபேசி வாயிலாக விவரங்களை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.