சென்னை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்றில் இருந்து தமிழக மக்கள் தங்களது குடும்பத்தை குறிப்பாக, மூத்த குடிமக்களைப் பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டும். முகக் கவசத்தை அனைவரும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றில் பாதுகாத்துக் கொள்ள மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவரும் தடுபூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வொரு குடிமக்களும் பின்பற்றி, கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநா் தெரிவித்துள்ளாா்.