முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்: விற்பனையாளா்கள் அறிவிப்பு


சென்னை: தமிழகத்தின் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும், முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என பெட்ரோலிய வணிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் கே.பி. முரளி வெளியிட்ட செய்தி: கரோனாவின் தீவிர தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளா்கள், முகக் கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கம் தெரிவித்திருந்தது. தற்போது, தமிழகத்தில் மீண்டும்  கரோனா பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஏப்.10-ஆம் தேதி முதல் மீண்டும் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாட்டு பெட்ரோலிய வணிகா்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com