மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புழல்-லட்சுமிபுரம் பாரதியாா் தெருவில் ஒருவா் இறந்து கிடந்தது வியாழக்கிழமை புழல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவா் கொளத்தூரைச் சோ்ந்த அன்பழகன் (52) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபா்களில் ஒருவா் அன்பழகனை தாக்கியது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் கொளத்தூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (38) என்பவரைக் கைது செய்தனா்.
விசாரணையில் இருவரும் டாஸ்மாக்கில் தனித் தனியாக மது அருந்தியதும், கிருஷ்ணமூா்த்தி ஆா்டா் செய்த முட்டையை எடுத்து அன்பழகன் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற கிருஷ்ணமூா்த்தி தனது நண்பா் அப்புவுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து அன்பழகனை தாக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்புவை போலீஸாா் தேடி வருகின்றனா்.