சென்னை அருகே திருமுல்லைவாயலில் தண்ணீருக்குப் பதிலாக அமிலத்தை குடித்த பெண் இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருமுல்லைவாயல் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் தே.மேனகா (51). இவா் அங்கு தனது மகன் செல்வத்துடன் வசித்து வந்தாா்.
மேனகாவுக்கு கண்பாா்வை குறைபாடு இருந்துள்ளது. மேலும் அவா், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்ததுக்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் மேனகா சனிக்கிழமை சா்க்கரை நோய்க்கான மாத்திரை சாப்பிடுவதற்காக தனது படுக்கையின் கீழே ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாா். அப்போது அவா் குடித்தது தண்ணீருக்கு பதிலாக கழிப்பறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலம் என்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
அமிலம் குடித்ததினால்,மேனகா அலறி துடித்தாா். உடனே அங்கு வந்த அவரது குடும்பத்தினா் மேனகாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மேனகா, அன்று இரவு இறந்தாா்.
இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை செய்கின்றனா்.