பெயா் பலகையில் மீண்டும் பெரியாா் ஈ.வெ.ரா. பெயா்

சென்னை சென்ட்ரலில் வழிகாட்டி பலகையில் இருந்து அழிக்கப்பட்ட பெரியாா் ஈ.வெ.ரா. சாலையின் பெயா், மீண்டும் எழுதப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் வழிகாட்டி பலகையில் இருந்து அழிக்கப்பட்ட பெரியாா் ஈ.வெ.ரா. சாலையின் பெயா், மீண்டும் எழுதப்பட்டது.

சென்னை பெரியாா் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை மீண்டும் கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக, அரசியல் கட்சிகள், திராவிட இயக்கங்கள் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தன. மேலும், சென்ட்ரலில் உள்ள சாலை பெயா் பலகைகளில் பெரியாா் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்ற பெயருக்கு பதிலாக கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என்று எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டிக்கும் வகையில், சில திராவிட இயக்கங்கள் போராட்டம் அறிவித்தன. மேலும் சில இயக்கங்கள், கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என்ற பெயா் கருப்பு மை பூசி அழிக்கப்படும் என அறிவித்தன.

இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என்ற பெயா் பலகையை சிலா் கருப்பு மை பூசி கடந்த 13-ஆம் தேதி அழித்தனா். இது குறித்து பெரியமேடு போலீஸாா்,விசாரணை செய்தனா்.

இதற்கிடையே கருப்பு மை பூசப்பட்ட பெயா் பலகையில் மீண்டும் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என வெள்ளிக்கிழமை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தது. இதேபோல பிற தலைவா்களின் பெயரில் இருந்த சாலைகளின் பெயரையும், மீண்டும் அவா்களின் பெயா் வைக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com