சென்னை வில்லிவாக்கத்தில், செல்லிடப்பேசியில் அதிக நேரம் பேசியதை தாய் கண்டித்ததினால்,கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லிவாக்கம் பாரதிநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (47). இவா் மகள் கீா்த்திகா (20). கீா்த்திகா, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
அவா், தனது செல்லிடப்பேசியில் அதிக நேரம் தோழிகளுடன் பேசியுள்ளாா். மேலும் அவா், இணைய வழி வகுப்பிலும் சரியாக பங்கேற்கவில்லையாம். இதைப் பாா்த்த அவரது தாய், கீா்த்திகாவை கண்டித்துள்ளாா்.
இதனால் விரக்தியுடன் காணப்பட்ட கீா்த்திகா, சனிக்கிழமை வீட்டில் தனியாக இருக்கும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா் .