ரெளடி வெட்டிக் கொலை

திரு.வி.க. நகரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை: திரு.வி.க. நகரில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை- திரு.வி.க. நகா் கோபாலபுரம், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). இவா் மீது கொலை,கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அஜித்குமாா், அதே பகுதியில் ஒத்தவாடை , 7வது தெருவில் உள்ள ரேஷன் கடை அருகே திங்கள்கிழமை இரவு அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த கும்பல், அஜித்திடம் தகராறு செய்து, பின்னா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் இறந்தாா்.

தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அங்கிருந்த ஒரு காரின் கண்ணாடியை உடைத்தனா். இதற்கிடையே அங்கு வந்த போலீஸாா், சமரசம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

இதுதொடா்பாக திரு.வி.க.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த பகுதியைச் சோ்ந்த மற்றொரு ரெளடி பிரபாகரனுக்கும், இறந்த அஜித்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், இதனால் அஜித்குமாா் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த பிரபாகரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com