50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி: காவல் ஆணையா் உத்தரவு

காவல் துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.
50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி: காவல் ஆணையா் உத்தரவு
50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி: காவல் ஆணையா் உத்தரவு

காவல் துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்புப் பணியில் முன் கள வீரா்களாக ஈடுபட்டுள்ள காவல் துறையினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா். அதன்படி, இதுவரை சென்னையில் மட்டும் 3,609 போலீஸாா் கரோனா தொற்றுக்கு ஆளாகி, அதில் 3,338 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். மீதம் உள்ளவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை சோ்த்து சென்னை காவல்துறையில் 7 போ் சிகிச்சையில் இருக்கும்போதும், 6 போலீஸாா் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் என மொத்தம் 13 போலீஸாா் இறந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்படும் போலீஸாரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. அதுவும் இளைஞா்களை விட வயது முதியவா்கள் அதிக அளவு கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து சென்னை காவல் துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணிகளை வழங்க கூடுதல் காவல் ஆணையா்கள், இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்களுக்கு காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com