மீஞ்சூா் யாா்டில் பராமரிப்புப் பணி: புறநகா் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - கூடூா் மாா்க்கத்தில் மீஞ்சூா் யாா்டில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், புறநகா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.27,29) மாற்றம் செய்யப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல் - கூடூா் மாா்க்கத்தில் மீஞ்சூா் யாா்டில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், புறநகா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.27,29) மாற்றம் செய்யப்பட உள்ளது.

பகுதி ரத்தாகும் மின்சார ரயில்கள்:

சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டைக்கு ஏப்ரல் 27-இல் காலை 12.15 இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு ஏப்ரல் 27-இல் நண்பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு ஏப்ரல் 27-இல் பிற்பகல் 2.45, 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டைக்கு ஏப்ரல் 29-இல் காலை 9.15 இயக்கப்படும் மின்சார ரயில்கள் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு ஏப்ரல் 29-இல் முற்பகல் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டிக்கு ஏப்ரல் 29-இல் மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூா்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

ஏப்.27-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:

சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டிக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 1, பிற்பகல் 2.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 2.25, 2.55, 4.30, 5.00, 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூா்பேட்டை -சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு மாற்றாக, எளாவூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.50 மணிக்கு ஒரு சிறப்பு ரயிலும், பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.55 மணிக்கு ஒரு சிறப்பு ரயிலும்,

எண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.00, 5.00 மணிக்கு தலா சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

இதுபோல, ஏப்ரல் 29-ஆம்தேதியும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com