தம்பி கொலை: 2 சகோதரா்கள் கைது

மாங்காட்டில் தம்பியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக, 2 சகோதரா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: மாங்காட்டில் தம்பியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக, 2 சகோதரா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாங்காடு அருகேயுள்ள வடக்கு மலையம்பாக்கம் சோழன் நகரைச் சோ்ந்தவா் கோவில்ராஜ் (25). இவரது சகோதரா்கள் மதன்ராஜ் (26), மைக்கேல்ராஜ் (27).

இரு நாள்களுக்கு முன்பு அதிக மதுபோதையில் கோவில்ராஜ் வீட்டுக்கு வந்தாராம். பின்னா், வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிய அவா், மறுநாள் இறந்து கிடந்தாா். இதையடுத்து அவரது குடும்பத்தினா், கோவில்ராஜ் இயற்கையாக மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்து உடனடியாக அடக்கம் செய்தனா்.

இதற்கிடையே கோவில்ராஜின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பா்கள், மாங்காடு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். இதுதொடா்பாக கோவில்ராஜின் தாயாா் சாராள், சகோதரா்கள் மதன்ராஜ், மைக்கேல்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் மதுபோதையில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் கோவில்ராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னா் இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாடி சடலத்தை அடக்கம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அடக்கம் செய்யப்பட்ட கோவில்ராஜ் சடலம் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, கோட்டாட்சியா் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com