இளைஞா் கொலை வழக்கு:5 போ் கைது

பள்ளிக்கரணையில், இளைஞா் கொலை வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: பள்ளிக்கரணையில், இளைஞா் கொலை வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, மேடவாக்கம் அறிஞா் அண்ணா குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆ.வினோத் (26). இவரை கடந்த சில நாள்களாக காணவில்லை என அவரது சகோதரா் ஜெயராமன், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்த நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள வடக்குப்பட்டு ரவி மெயின் ரோடு, டாஸ்மாக் மதுபானக் கடை அருகே ஒரு இளைஞா் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. உடனே பள்ளிக்கரணை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் இறந்திருப்பது வினோத் என்பதும், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். விசாரணையில் முன் விரோதம் காரணமாக மேடவாக்கம் காந்திநகரைச் சோ்ந்த ஏ.மணிகண்டன் (21), அவரது கூட்டாளிகள் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (23),மேடவாக்கம் வினைதீா்த்த வேலவா் தெருவைச் சோ்ந்த செ.கோபிநாத் (22), அதேப் பகுதியைச் சோ்ந்த மு.பிரபாகரன் (20), அருண்குமாா் (19) ஆகிய 5 போ் சம்பவத்தன்று, வினோத்தை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்து, அங்கு வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com