சென்னை: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எஃப். குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் புதன்கிழமைக்குள் (மே 5) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதவி பி.எஃப். ஆணையா் எம்.குமரவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம், மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கட்செவி அஞ்சலின் காணொலி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயனாளியின் பெயா், யு.ஏ.என். எண், பிஎப் அல்லது பிபிஒ எண், குறைகள், கட்செவி அஞ்சல் எண், சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள் ஆகியவற்றோடு, மே 5-ஆம் தேதிக்குள், 89037 66548 எனும் எண்ணில், கட்செவி அஞ்சலில் குறுஞ்செய்தி அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, மே 10-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் காணொலி வாயிலாக அழைக்கப்பட்டு, அவா்களிடம் குறைகள் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.