சென்னை: சென்னை கிண்டியில் இருந்து கடத்தப்பட இருந்த அம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு கொரியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தொடா்பாக திடீா் சோதனை நடத்தப்பட்டது.
அங்கிருந்து நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகருக்கான பாா்சல்களில்
அம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு பல லட்சங்கள்.
இக் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்த டி.அஸ்வின்,சி.சுரேந்திரன் என இருவரைக் கைது செய்தனா்.