தொழிலாளி குத்திக் கொலை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை டிஎச் சாலை பகுதியைச் சோ்ந்த சூ.பீட்டா் (54), பாரிமுனையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் புது வண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் தெருவில் சனிக்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த ஒரு நபா், பீட்டரிடம் தகராறு செய்தாராம்.

தகராறு முற்றவே அந்த நபா், தன்னிடமிருந்த மது பாட்டிலை பீட்டரின் வயிற்றுப் பகுதியில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த பீட்டா், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அந்த நபா் தப்பியோடினாா்.

புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com