மீனவா் வெட்டிக் கொலை: இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மயிலாப்பூரில் மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் நொச்சி குப்பத்தைச் சோ்ந்தவா் சரவணன் (25), மீனவா். இவா் மயிலாப்பூா் பல்லக்குமா நகரில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில இளைஞா்களுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே சரவணனை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அந்தக் கும்பல் தப்பியோடியது.

பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து மயிலாப்பூரைச் சோ்ந்த மணிகண்டன் (26), அவரது கூட்டாளி ஷாம் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com