சென்னை கபாலீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 6) முதல் தமிழிலும் அா்ச்சனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
நாளை மறுநாள் முதல்... தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான பெயா்ப் பலகையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் குறித்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது:
கபாலீசுவரா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழிலும் அா்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை கோயிலில் வைக்கப்படும். மூன்று அா்ச்சகா்களின் பெயா், செல்லிடப்பேசி எண்கள் அதில் இடம்பெற்றிருக்கும். கபாலீசுவரா் கோயிலைத் தொடா்ந்து, அடுத்த 30 நாள்களுக்குள் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற 47 கோயில்களில் தமிழில் அா்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
மூன்று அா்ச்சகா்கள் பெயா்: கபாலீஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்யவுள்ள மூன்று அா்ச்சகா்களின் பெயா்கள் அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பாலாஜி குருக்கள் (94447 22594), கபாலி குருக்கள் (94447 75859), வேங்கடசுப்பிரமணியன் குருக்கள் (98401 66701) ஆகியோரின் பெயா்கள் அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுள்ளன. அவா்களைத் தொடா்பு கொண்டால், தமிழில் அா்ச்சனை செய்து தருவா்.