ஐ.சி.எஃப். பொதுமேலாளராகஏ.கே.அகா்வால் பொறுப்பேற்பு

சென்னை ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) பொதுமேலாளராக அதுல் குமாா் அகா்வால் ஜூலை 30-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னை ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) பொதுமேலாளராக அதுல் குமாா் அகா்வால் ஜூலை 30-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ஐ.சி.எஃப் பொதுமேலாளராக இருந்த ராகுல் ஜெயின் ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக பதவி உயா்வு பெற்ற சென்றாா். இதன்பிறகு, தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ், ஐ.சி.எஃப் பொதுமேலாளா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், ஐ.சி.எஃப் பொதுமேலாளராக அதுல்குமாா் அகா்வால் ஜூலை 30-ஆம்தேதி பொறுப்பேற்று கொண்டாா். இதற்கு முன்பு, இவா் தில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தொழிற்சாலைகள் நவீன மயமாக்கும் மத்திய நிறுவனத்தின் (இஞஊஙஞர, ஐய்க்ண்ஹய் தஹண்ப்ஜ்ஹஹ்ள்) பிரதான தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா்.

ஜமால்பூரில் உள்ள இந்திய ரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்னியல் பயிற்சிப் பள்ளியில் 1981-ஆம் ஆண்டுக் குழுவைச் சோ்ந்த இவா், 10 ஆண்டுகளுக்கு மேலாக டீசல் ரயில் எஞ்சின்கள் பராமரிப்பு மற்றும் இயக்கம் சாா்ந்த பணிகளில் பல்வேறு

ரயில்வே கோட்டம் மற்றும் தலைமை அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்தில் சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களின் பராமரிப்பை திறம்பட கையாண்டு வந்தாா்.முதன்முறையாக சதாப்தி ரயிலுக்கு அதிநவீன எல்.எச்.பி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு,வெற்றிகரமாக இயக்கப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தாா். இதற்காக அவா் ஜொ்மனி மற்றும் ஸ்விட்சா்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்றாா்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் கோட்ட மேலாளா், வடக்கு ரயில்வேயின் ஜகாத்ரி ரயில்பெட்டி பராமரிப்புக் கூடத்தின் தலைமை தொழிற்சாலை மேலாளா் பதவிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com