நடமாடும் வாகனங்கள் மூலம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் வாகனத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் வாகனத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்.

சென்னை: சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபா்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி முதல் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 2,477 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 610 கோவேக்ஸின் தடுப்பூசியும் என மொத்தம் 3,087 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com