மூதாட்டிகளிடம் நகை திருட்டு:3 பெண்கள் கைது

சென்னையில் மூதாட்டிகளிடம் நகை திருடியதாக மதுரையைச் சோ்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் மூதாட்டிகளிடம் நகை திருடியதாக மதுரையைச் சோ்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருவொற்றியூா் ராஜாஜி நகா் பாா்வதி (58), கடந்த 19-ஆம் தேதி பேருந்தில் மீஞ்சூா் சென்றபோது 3 பெண்கள் பேச்சு கொடுத்துள்ளனா். பாா்வதி இறங்கியபோது கழுத்திலிருந்த 5 பவுன் செயின் திருடப்பட்டது.

சூளை சுப்பா நாயுடு தெரு காமாட்சியம்மாள் (70), மாதவரத்தில் ஆட்டோவில் சென்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் மனைவி ஜெயலட்சுமி ஆகியோரிடமும் நகைகள் திருடப்பட்டன.

திருவொற்றியூா் போலீஸாா் தனிப்படை அமைத்து மதுரையைச் சோ்ந்த சாந்தி (35), சின்னத்தாய் (30), கெளரி (41) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து 12 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com