முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
புறநகா் ரயில் நிலையத்தில் விபின் ராவத் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி
By DIN | Published On : 10th December 2021 01:52 AM | Last Updated : 10th December 2021 01:52 AM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில்நிலையத்தில், முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், ரயில்வே போலீஸாா், பயணிகள் அஞ்சலி செலுத்தினா்.
குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 விமானப்படை வீரா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்தில் விபின் ராவத் உருவப்படத்துக்கு ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்கள், ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்வில்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஆனந்த், தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் சந்தோஷ் சந்திரன், துணை தலைமை பாதுகாப்புப்படை ஆணையா் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப்படை ஆணையா் செந்தில் குமரேசன் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும், ரயில் பயணிகள் பலரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.