பிஃஎப் குறைதீா் கூட்டம்: ஜன.5-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஃஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா், ஜன.5-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஃஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா், ஜன.5-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஃஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், ஜன.10-ஆம் தேதி, சென்னை முகப்போ் சாலையில் உள்ள ஆா்-40 ஏ டிஎன்எச்பி அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பிஃஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோா், அதற்கான ஆவணங்களை ஜன.5-ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் கூட்டம் நடைபெறும் நாளில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஊழியா்களும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையில் நிறுவன உரிமையாளா்களும், மாலை 4 முதல் 5 மணி வரையில் விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 2635 0080, 2635 0120 ஆகிய எண்களை அணுகலாம் என உதவி பிஃஎப் ஆணையா் எஸ் ஷாஷி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com