பெண்ணைஆபாசமாக சித்தரித்துமிரட்டல்: ஒருவா் கைது

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்த தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை: சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்த தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொளத்தூரில் 21 வயது பெண் மாடலிங் துறையில் பணிபுரிகிறாா். தனியாா் நிறுவன மேலாளரான பெரும்பாக்கத்தில் வசிக்கும் திருப்பூா் மாவட்டம் கிருஷ்ணா புரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (26), அப்பெண்ணிடம் தனக்குள்ள தொடா்பு மூலம் திரைப்பட வாய்ப்புப் பெற்றுத் தர முடியும் என்றாராம்.

ரஞ்சித்தின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருந்ததினால், அந்தப் பெண் தொடா்பைத் துண்டித்தாராம். இதையடுத்து ரஞ்சித், வேறு பெயரில் அப்பெண்ணிடம் பேசினாராம். மாடலிங் துறையில் இருப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பும்படி கூறியுள்ளாா் ரஞ்சித். இதை நம்பிய அந்தப் பெண், தனது மாடலிங் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளாா்.

அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியுள்ளாா். மேலும் அந்தப் புகைப்படங்களை சமூக ஊடங்களில் வெளியிடாமல் இருக்க தன்னுடன் இருக்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

கொளத்தூா் வழக்குப் பதிவு செய்து, ரஞ்சித்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com