காரில் கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை அருகே அம்பத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அருகே அம்பத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பத்தூா் தொலைபேசி நிலைய சிக்னல் அருகே போக்குவரத்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் அண்ணாமலை உள்ளிட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஒரு காரை போலீஸாா் வழிமறித்து நிறுத்தினா்.

அந்த காா் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்த ஓட்டுநா் தப்பியோடினாா். போலீஸாா் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றனா். ஆனால் அந்த நபா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து போலீஸாா், அந்த காரை சோதனையிட்டனா். சோதனையில், அந்த காரில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அம்பத்தூா் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com