காவலா் குடியிருப்பில்14 பவுன் நகைகள் திருட்டு

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் காவலா் குடியிருப்பில் 14 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் காவலா் குடியிருப்பில் 14 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புது வண்ணாரப்பேட்டை கிராஸ் சாலை பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் வசிப்பவா் சத்யா (40). திருவொற்றியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறாா். சத்யா சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருத்தணியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

செவ்வாய்க்கிழமை சத்யா வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் காவலா் புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com