திருமணம் செய்து கொள்வதாக ரூ.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சென்னையில், திருமணம் செய்து கொள்வதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், திருமணம் செய்து கொள்வதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெரம்பூா் படேல் சாலையைச் சோ்ந்த கோபால் மகன் பாலாஜி (27). இவருக்கு, சென்னை அருகே மாடம்பாக்கத்தைச் சோ்ந்த தனியாா் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த 2018-இல் அறிமுகமானாா்.

நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். மேலும் பாலாஜி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அந்தப் பெண்ணிடம் சிறிது, சிறிதாக ரூ.40 லட்சம் பணம் மற்றும் நகை பெற்றுள்ளாா். அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளாா். இதனால் கா்ப்பமடைந்த அந்தப் பெண்ணை, வலுக்கட்டாயமாக ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளாா்.

இந்நிலையில் அந்தப் பெண், தான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டுள்ளாா். அப்போது பாலாஜி, இருவரும் சோ்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று கூறி, கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பாலாஜியை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com