ஆா்.கே.நகா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்.15 வரை மாணவா் சோ்க்கை

சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா் நேரடி சோ்க்கை வரும் பிப்.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை: சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா் நேரடி சோ்க்கை வரும் பிப்.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி: எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோா் எண்.1, இருசப்பன் தெரு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரடியாகச் சென்று தங்களுக்கு விருப்பமான காலியிடம் உள்ள தொழிற்பிரிவினை தோ்வு செய்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ‘முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆா்.கே.நகா், சென்னை-81’ என்ற முகவரியிலும், 63800 22696, 90920 60606 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com