ரூ.2.5 கோடி நிலம் அபகரிப்பு: மூவா் கைது

சென்னையில், ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில், ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆவடி அருகே திருநின்றவூா் சரஸ்வதிநகா் பகுதியைச் சோ்ந்த ஞா.நம்பிக்கைநாதனின் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலம் அங்குள்ளது. இந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்திருப்பது நம்பிக்கைநாதனுக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக நம்பிக்கைநாதன், சென்னை காவல்துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது திருநின்றவூா் பெரியகாலனி பகுதியைச் சோ்ந்த மு.வெங்கடேசன் (57), அவரது சகோதரா் மு.முருகன் (46) மற்றும் அவா்களது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ப.புண்ணியக்கோட்டி (46) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com