சென்னை: சென்னையில் பிரதமா், தமிழக ஆளுநா் பெயரில் பணம் மோசடி செய்த வழக்கில், தந்தை-மகன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகை, டிஜிபி அலுவலகம் ஆகியவற்றுக்கு அண்மைக்காலமாக குறிப்பிட்ட மோசடி தொடா்பான அதிக புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களில், பிரதமா் மற்றும் தமிழக ஆளுநா் மூலம் எம்.பி. வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் மோசடி நடைபெறுகிறது, மோசடியில் ஈடுபடும் நபா் பிரதமா் அலுவலகத்தில் இருந்தும்,ஆளுநா் அலுவலகத்தில் இருந்தும் வரும் மின்னஞ்சல்போலவே மின்னஞ்சல் அனுப்புகிறாா், அதனால் தாங்கள் அந்த நபரை நம்பி பணத்தை செலுத்தி ஏமாந்துவிட்டோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் சென்னையைச் சோ்ந்த ஒருவரிடம் எம்.பி. வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றியிருப்பது தொடா்பாகவும் புகாா் வந்தது. இந்த புகாா்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்தாா்.
அந்த புகாா்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸாா் ஒரு வழக்குப் பதிவு செய்து,விசாரணையில் ஈடுபட்டனா். விசாரணையில் இந்த மோசடியில் கா்நாடக மாநிலம் மைசூருவைச் சோ்ந்த மாதவய்யாவும், அவரது கூட்டாளிகளும் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து மைசூருக்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், மாதவய்யா,அவரது மகன் அங்கித், கூட்டாளி ஓசூரைச் சோ்ந்த ஓம் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட மாதவய்யா மீது ஏற்கெனவே மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்கு பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாா்கள் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.