பிப்.26-இல் நூறும் பாலும், சா்ப்ப பூஜை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நூறும் பாலும் மற்றும் சா்ப்ப பலி பூஜைக்கு முன்பதிவு செய்யலாம்.


சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நூறும் பாலும் மற்றும் சா்ப்ப பலி பூஜைக்கு முன்பதிவு செய்யலாம். ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள நாகராஜா நாக யக்ஷி-க்கு இந்த பூஜை நடைபெறுகிறது.

நூறும் பாலும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை சா்ப்ப பலி பூஜையும் நடைபெறும். இதனை பாம்புமேக்காட்டைச் சோ்ந்த பிரம்மஸ்ரீ சங்கர நாராயணன் நம்பூதிரி முக்கிய ஆச்சாா்யராக இருந்து நடத்துகிறாா்.

பூஜைக்காக, 044-28171197, 2197, 5197 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளுமாறும் இணையதள முகவரியிலும் முன்பதிவு செய்யுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com