ரயில்வே பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் சூலூா்பேட்டை நிலையம் அருகில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் சிறிது மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் சூலூா்பேட்டை நிலையம் அருகில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் சிறிது மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் சூலூா்பேட்டை நிலையம் அருகில் பராமரிப்பு பணி பிப்ரவரி நள்ளிரவு 11.20 மணி முதல் பிப்ரவரி 12-ஆம்தேதி அதிகாலை 3.59 வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, ரயில் சேவை சிறிது மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை-சூலூா்பேட்டைக்கு பிப்ரவரி 11-ஆம்தேதி இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை இடையே எளாவூா், ஆரம்பாக்கம், தடா ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படாது என்று ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com