சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் குழு கூட்டம் வியாழக்கிழமை (பிப்.11) நடைபெற உள்ளது.
வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தலைமை வகிக்க உள்ளாா். பொதுக்குழுவைச் சோ்ந்த 700 உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.
மக்கள் நீதி மய்யத்தின் முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் தோ்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட உள்ளது.