பள்ளி மாணவா் தற்கொலை

ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் விரக்தியடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.


சென்னை: ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியாததால் விரக்தியடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

கொளத்தூா் காமராஜ் நகா் முருகன் மகன் பிரவீண் (16), தனியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவா். இரு நாள்களாகப் பள்ளிக்குச் சென்றாா்.

பிரவீண் புதன்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பிரவீண் எழுதிய ஒரு கடிதத்தில், ஏற்கெனவே நடைபெற்ற ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் புரியாததால், இறுதித் தோ்வில் மதிப்பெண் குறைவாக வாங்கி விடுமோ என பயமாக உள்ளது. எனவே, தான் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com