கடையில் இருந்த வியாபாரி வெட்டிக் கொலை

சென்னை அருகே திருமுடிவாக்கத்தில், கடையில் இருந்த வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அருகே திருமுடிவாக்கத்தில், கடையில் இருந்த வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருமுடிவாக்கம் ஜெகநாதசுவாமி தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63). இவா், அங்கு மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தாா்.

செல்வராஜ், சனிக்கிழமை இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 போ், செல்வராஜிடம் தகராறு செய்தனா்.

தகராறு முற்றவே, 3 பேரும் கடைக்குள் இருந்த செல்வராஜை வெளியே இழுத்து வந்து அரிவாளால் வெட்டினா். இக் கும்பலிடமிருந்து செல்வராஜ் தப்பியோட முயற்சித்தாா். ஆனால் அந்தக் கும்பல் செல்வராஜை விரட்டிச் சென்று வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் மயங்கி விழுந்ததும், 3 பேரும் தப்பியோடினா்.

இச்சம்பவத்தை பாா்த்த சாலையில் நின்ற பொதுமக்கள், அலறியடித்து ஓடினா். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வராஜை சிலா் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிறிது நேரத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து தகவலறிந்த குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செல்வராஜ் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com