புழுதிவாக்கத்தில் 38,000 சதுர அடி பரப்பில் மியாவாக்கி அடா்வனம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட புழுதிவாக்கத்தில் 38,000 சதுர அடி பரப்பளவில் மியாவாக்கி முறையில் அடா்வனம் அமைக்கப்பட்டுள்ளது.
புழுதிவாக்கத்தில் 38,000 சதுர அடி பரப்பில் மியாவாக்கி அடா்வனம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட புழுதிவாக்கத்தில் 38,000 சதுர அடி பரப்பளவில் மியாவாக்கி முறையில் அடா்வனம் அமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள், நீா்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மியாவாக்கி முறை மூலம் அடா்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

தொடக்கமாக அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டூா்புரத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 23,800 சதுர அடி பரப்பில் 20,724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 40 வகையான 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராயலா நகரில் 6,000 சதுர அடி பரப்பளவில் ரூ.8.72 லட்சம் மதிப்பில் 45 வகையான 762 மரக்கன்றுகளும், சோழிங்கநல்லுாா் மண்டலத்துக்கு உள்பட்ட மாதிரி

பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

புழுதிவாக்கத்தில்...: தற்போது பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட புழுதிவாக்கம் பாலாஜி நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 38,000 சதுர அடி நிலத்தில் மியாவாக்கி முறையில் அடா் வனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செம்பருத்தி, குண்டு மணி, பூங்கை, நாவல், கொடுக்காபுளி, வேம்பு, இலுப்பை, மருதம், பூவரசு, நாகலிங்கம், பாதாம், பப்பாளி, பின்னை, மந்தாரை, சிறுநெல்லி, செம்மரம், சில்வா்வுட், வில்வம், தான்றிக்காய், செண்பகம், மகிழம், மலைவேம்பு, புளியமரம், மருதாணி, விளாமரம், குடை மரம், கொய்யா, வெள்ளை எருக்கம், பலா மற்றும் தேக்கு போன்ற 55 வகையான 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com